Search This Blog

Monday, 9 September 2013

தவறை சுட்டிகாட்டுவது எப்படி ?



ஒருவர் ஒரு தவறு செய்தார் என்றால் அவரை நான்கு பேர் முன்ணிலையில் வைத்து அவரது தவறை சுட்டிக்காட்டுவது சரியா என்று நாம் முதலில் எண்ணிப்பார்க்க வேண்டும் ஏன்னெனில், நாம் அந்த தவறை செய்தால் அதே போல் மற்றவர்கள் முன்ணிலையில் நம்மை கேள்வி கேட்டால் நாம் அதை ஏற்று கொள்வோமா (சகித்து கொள்வோமா) என்று எண்ணிப்பார்க்க வேண்டும், நாம் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் பின்பு நாம் ஏன் மற்றவருக்கு அதை செய்யவேண்டும்.

பின்பு தவறை சுட்டிகாட்டுவது எப்படி ?

தவறு செய்தவரை  தனியாக அழைத்து அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி தவறை சரி செய்து கொள்ளுமாறு கூறுவது தானே சிறந்தது, "நாமும் இதை தானே மற்றவர்கள் இடமிருந்து எதிர்பார்ப்போம்"

குறிப்பு :-
                 நான் இங்கு தனக்கு தெரியாமலே தவறு செய்தவர்களை பற்றி தான் கூறியிருக்கிறேன், தவறு என்று தெரிந்தே செய்தவர்களை பற்றியோ அல்லது எப்போதும் தவறே செய்பவர்கள் பற்றி கூறவில்லை.  

Tuesday, 30 July 2013

திருமணம் எப்படி நடத்த கூடாது & எப்படி நடத்த வேண்டும்


ஆண்களுக்கோ பெண்களுக்கோ திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்து வைக்கபோகிறோம் என்று பெற்றோர் சந்தொஷப்படாமல் அதற்குரிய செலவை பற்றி கவலைப்படுகிறார்கள்

தன் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்று தன் உறவினர்களுக்கு சொன்னால், இவனுக்கு என்ன இப்போது திருமணம் முக்கியமா என்று கூட மனதில் நினைக்கிறார்கள், அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், அவர் திருமணத்தின் போது காசு கட்டவேண்டும், தட்டுவரிசை, மொய் பணம் போன்றவை செய்ய வேண்டும் பல பணச்செலவுகள் உள்ளன, இதற்காக சந்தோஷமாக எடுத்து கொள்ளவேண்டிய விஷயத்தை கூட கஷ்டமாக எடுத்துக்கொள்கிறார்கள்

அக்கம் பக்கத்தினர்களுக்கு பத்திரிக்கைவைத்தால் அவர்கள் கூட கஷ்டமாக மனதில் நினைக்கிறார்கள் அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், அவர்களும் திருமணத்தின் போது மொய் பணம் வைக்கவேண்டுமே  என்ற செலவு உள்ளது அதன் காரணமாக அவர்களும் சந்தோஷ்மாக ஏற்றுக்கொள்வதில்லை

ஒரு திருமணத்தை நடத்த பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் மட்டும் செலவு  செய்வதில்லை அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் செலவு செய்ய வேண்டிவுள்ளது, அவர்களின் குடும்ப சூழ்நிலை, கஷ்டம் எதுவும் தெரியாமல், திருமணம் செய்யப்போகிறோம் என்று பத்திரிக்கையை எடுத்துகொண்டு வந்துவிடுகிறார்கள்

பெண் குழந்தை வயிற்றில் இருப்பது தெரிந்ததும் அவளை கருவிலேயே கொல்லவேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு எதனால் தோன்றுகிறது என்று பார்த்தால் அவள் திருமணத்திற்கு தங்க நகைகள், வீட்டு உபயோக சீர்வரிசை பொருட்கள், மாப்பிள்ளைக்கு தங்க நகைகள்,வண்டி.... ஆகியவை வாங்கித்தரவேண்டும், இதன் காரணமாக பெற்றோர்களுக்கு பெண் குழந்தை என்றால் ஒரு சுமையாகத்தான் தெரிகிறது

ஆண் குழந்தை பெற்றவர்களுக்கு திருமணத்தினால் வரவாக தானே இருக்கிறது என்று நினைக்கிறோம் பெரும்பாலும் திருமணத்தை நடத்துவது மாப்பிள்ளை வீட்டாராகத்தான் இருக்கிறார்கள். வரவு இருந்தாலும் செலவும் இருக்கத்தானே செய்கிறது, அவற்றிக்கும்  பணம் தேவை அல்லவா ?

பணம் இருப்பவன் ஆடம்பரமாக திருமணம் செய்வதை பார்த்து, கௌரவத்திற்காக நாமும் அதே போல் திருமணம்செய்ய வேண்டும் என்று நினைத்து பணத்தை மற்றவர் இடம் வட்டிக்கு  கடன் வாங்கி திருமணம் செய்கிறார்கள், பிறகு திருமண கடனை அடைப்பதற்காக குழந்தை பெறுவதை கூட தள்ளிவைக்கிறார்கள் அல்லது திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் அந்த திருமண கடனுக்கான வட்டியை கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அசலை அடைத்தபாடேயில்லை, அதற்கு பதிலாக அந்த பணத்தை வைத்து ஒரு தொழில் தொடங்கியிருந்தால் அசலையும் அடைத்திருப்பார்கள் லாபத்தையும் பெற்றிருப்பார்கள் மணமக்களும் சந்தோஷமாக வாழ்ந்து இருப்பார்கள், அதை விட்டுவிட்டு திருமணத்தை ஆடம்பரமாக செய்து விட்டு குழந்தைகள் பிறந்த பிறகும் வட்டியை கட்டுவார்களா இல்லை குழந்தையை சந்தோஷமாக வளர்ப்பார்களா ? எதற்காக இந்த ஆடம்பர திருமணம். தாலி கட்டப்போகும் அந்த இரண்டு முன்று நிமிடத்திற்காக பல லட்சங்களை எதற்காக வீணாக்க வேண்டும் ? சிந்தித்து பாருங்கள் !

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் பெண்ணிற்கு இத்தனை பவுன் நகை போட வேண்டும் மேலும் மாப்பிள்ளைக்கு இத்தனை பவுன் நகை, வண்டி, சீர்வரிசை ஆகியவைகளை கேட்பதால் பெண்வீட்டார் கடன் வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தன்  மகளை திருமணம் செய்து வைத்து சந்தோஷமாக அனுப்பவேண்டிய பெற்றோர் தன் கடன் சுமையை நினைத்து வருந்தி கொண்டே வழி அனுப்புகிறார்கள், அந்த திருமணத்தன்று போட்டோவும், விடியோவும் எடுத்து வைத்துகொள்கிறார்கள், அந்த  போட்டோவையும், விடியோவையும் பார்த்தால்  என்ன தோன்றும் ? அது அவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குமா அல்லது தான் திருமணத்திற்கு வாங்கிய கடன்களை நினைவுபடுத்துமா, மாப்பிள்ளையும் தன் மகளும்  வீட்டிற்கு வந்தால் அவர்கள் வந்த வண்டியையும் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளையும்  பார்க்கும் போது தான் வண்டிக்கும் நகைக்கும் வாங்கிய கடனைத்தான் பெற்றோர்ருக்கு அது  நினைவுப்படுத்தும்

பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை  மற்றும் நகை போடுமாறு கேட்பதற்கு என்ன காரணமக அவர்கள் கூறுவதாவது

நாங்கள் எங்களுக்காகவா கேட்கிறோம் உங்கள் மாப்பிள்ளைக்கு பிற்காலத்தில் பணத்தேவை ஏற்படும் போது அந்த நகைகள் மற்றும் பணம் உபயோகமாக இருக்கும் அதற்காக தான் கேட்கிறோம் என்று கூறுகிறார்கள், இதில் இருந்து என்ன தெரிகிறது என்று பார்த்தால்,  மாப்பிள்ளையை பெற்றோர் தன் மகன் வருங்காலத்தில் கஷ்டபடுவான் என்றும் தன் மகன் முன்னேற மாட்டான் என்றும் அவர்களுக்கு முன்பே தெரிந்தது போல் கூறுகின்றனர், இது தன் மகனை அவர்களே கேவலப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் போல் உள்ளது

திருமணம் என்கின்ற பெயரில் பணத்தை வீண்விரயம் செய்வது போதாதென்று, திருமணத்திற்கு முன்பு  நிச்சயதார்த்தம் என்கின்ற பெயரில் அதையே திருமணம் போன்று ஆடம்பரமாக நடத்துகிறார்கள் அதற்கும்  பத்திரிக்கை, மண்டபம், சாப்பாடு..... போன்று பல செலவுகள் செய்கிறார்கள்

இப்படி ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி அதை மகிழ்ச்சியாகவாவது நடத்தி முடிக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை, இவர்கள் யாருக்காக இவ்வளவு ஆடம்பரமாக நடத்தினார்களோஅந்த உறவினர்களாளே  அது சரியில்லை  இது சரியில்லை என்று திருமணத்தில் பிரச்சனைகள் தான் ஏற்படுகின்றது

 இப்போது நடக்கும் திருமணத்தை பார்க்கும் போது எனக்கு இது ஒரு"ஆண் விபச்சாரத்தை போன்று தான் தோன்றுகிறது".  சிறிது சிறிதாக பணத்தை பெற்றுக்கொண்டு சுகத்தை கொடுப்பதற்கு பதிலாக மொத்தமாக பெற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் சுகத்தை கொடுக்கிறார்கள்

இந்த ஆடம்பர திருமணத்தினால் பல பெற்றேர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்துவைக்கமுடியவில்லையே என்று வருந்தி அவர்கள் தற்கொலை செய்துகொல்கின்றன,பல பெண்கள் 30 வயதாகிவிட்டது இனிமேல் நாமக்கு திருமணம் நடக்காது நாம் பெற்றேருக்கு சுமையாக இருக்க வேண்டாம் என்று நினைத்து தற்கொலை செய்துகொல்கின்றனர்,சிலர் தன் உடல் தேவைக்காக விபச்சாரத்தில் இடுபட்டுவிடுகின்றனர்,இவை அனைத்திற்கும் காரணம் ஆடம்பர திருமணமே

நான் இங்கு திருமணமே வேண்டாம் என்று கூறவில்லை, அதை ஆடம்பரமாக நடத்த வேண்டாம் என்பதை தான் கூறுகிறேன், வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே  நடக்கபோகும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதில் என்ன தவறு என்று தோன்றலாம், அதற்காக வாழ்க்கையில் பாதி ஆண்டுகள் அல்லது முழு ஆண்டுகளும் கடன் சுமையோடு வாழ வேண்டுமா, அதற்கு பதிலாக அந்த ஒரு நாளை எளிமையாக நடத்திவிட்டு மீதி ஆண்டுகளை  மகிழ்ச்சியோடு வாழலாம் அல்லவா

பின்பு திருமணத்தை எப்படி தான் நடத்துவது ?

தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணை காப்பாற்றுவது ஆணிண் கடமை, அதனால் தன் வருமானத்திற்கு ஏற்றவாறு நகையும் புடவையும் வாங்கிக்கொடுத்து, அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும், திருமணத்தை அரசு திருமணப்பதிவு அலுவலகத்தில் செய்து பின்பு தன் வீட்டில் நெருங்கிய உறவினார்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை அழைத்து விருந்து அளித்து திருமண செய்தியை மகிழ்ச்சியுடன் கூறி அவர்களை வழி அனுப்பி திருமண வாழ்வை துவங்குவது சிறந்தது, சிலருக்கு வீட்டில் விருந்து அளிக்க இடப்பற்றாக்குறை இருப்பவர்கள், அவர்கள் சமூகக்கூடத்தில் விருந்தை அளிக்கலாம், இந்த திருமணத்தை நடத்த மிகக்குறைந்த செலவே ஆகும்

உங்களாள்  முடிந்தால் அனாதைகளுக்கோ, ஊணமுற்றவர்களுக்கோ கண்பார்வையற்றவர்களுக்கோ உணவளியுங்கள், அது அவர்களுக்கு நீங்கள் ஒரு வேளை உணவு அளித்தோம் என்கிற மனநிறைவு கிடைக்கும்

இப்படி திருமணத்தை நடத்தி முடித்து திருமண வாழ்க்கையை துவங்கினால் வட்டியும் அசலும் கட்ட வேண்டும் என்று புலம்பிக்கொண்டு வாழ்க்கை நடத்த தேவையில்லை. தங்களை சுற்றி உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் செலவு வைக்கபோவதும் இல்லை. அவர்களும் மனதார வாழ்த்திவிட்டு செல்வார்கள்

இப்படி திருமணம் நடத்தினால் திருமண வாழ்வு மகிழ்ச்சியாகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிக்கவும் செய்யலாம்

பணம்வைத்திருப்பவன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதை பார்த்து தான். இல்லாதவன் தானும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறான், ஆகையால் இருப்பவன் எளிமையாக திருமணத்தை நடத்தினால் இல்லாதவனும் எளிமையாக நடத்துவான்

ஏன் எளிமையாக நடத்துகிறீர்கள், ஆடம்பரமாக நடத்துங்களேன் என்று உங்களிடம் மற்றவர்கள் கேட்டால், அவர்களை பார்த்து நீங்கள் என் திருமணத்திற்கு "5 லட்சம் ரூபாய் இனாமாக" கொடுங்களேன் என்று கேளுங்கள், அப்பொழுது அவர்களுக்கு பணத்தின் அருமை  தெரியும்


என் திருமணம் இப்படித்தான் நடக்கும் 

Tuesday, 21 May 2013

திருமணத்திற்கு பின் மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி


·       fztDk; kidtpAk; XUtUf;F XUth; khpahij nrYj;JtJk; kw;Wk; kdjhu ek;GtJk; mtrpak.;

·       tpLKiw ehl;fs; my;yJ thu ,Wjpapy; flw;fiu> czTtpLjp> g+q;fhf;fs; Nghd;w ,lq;fSf;F nrd;W kfpo;r;rpahf ,Ue;Jtpl;L tUtJ jdf;Fk; jd; FLk;gj;jpdh;f;Fk; kdjstpy; ed;ikjUk;.

·       fztNdh kidtpNah VNjDk; XU ey;y fhhpak; nra;jhy; XUth; kw;nwhUtiu kdk;tpl;L ghuhl;l Ntz;Lk;> mth;fSf;F ghpR nfhLj;jy;> czTtpLjpf;F mioj;J nry;jy; Nghd;w fhhpaq;fis nra;J jdJ ghuhl;il ntspgLj;j Ntz;Lk;> mJ mth;fSf;F Cf;fj;ijj; jUk;. 

·       fztDk; kidtpAk; jpdKk; kwf;fhky; Kj;jk; nfhLf;f Ntz;Lk;> ,utpy; J}q;Ftjw;F Kd;G ehd; cd;id fhjypg;gjhf nrhy;y Ntz;Lk;>mJ mth;fsJ md;ig ntspgLj;Jk;. 

·       fztDk; kidtpAk; ,utpy; J}q;Ftjw;F Kd; ,d;W jhq;fs; re;jpj;j gpur;ridfs; kw;Wk; ey;y tp~aq;fis gw;wpAk; NgrNtz;Lk;> mJ XUtUf;F XUth; kdjstpy; MWjyhfTk;> me;ehspy; gpur;rid Vw;gl;bUe;jhy; ey;y jPh;Tk; fpilf;Fk;.

·       fztNdh kidtpNah ntspa+hpy; ,Uf;Fk; NghJ> mth;fis njhiyNgrpKyk; njhlh;Gnfhz;L rhg;gpl;Bh;fsh  cly; epiy vg;gb ,Uf;fpwJ... vd;W Nfl;fNtz;Lk;> mJ mth;fSf;F re;Njh~j;ij jUk;.

·       FLk;gj;jpy; Kf;fpakhd KbTfs; vLf;Fk; NghJ jd; tho;f;if Jizaplk; fUj;Jfs; Nfl;fNtz;Lk;> me;j Kf;fpakhd KbTfs; gw;wp mth;fs; ey;y fUj;J njUtpj;jhy; mjid Vw;W nfhs;sNtz;Lk;.

·       fztNdh kidtpNah ehd; Vd; vy;yh KbTf;Fk; fUj;J Nfl;fNtz;Lk;? ,J vd; gzk; ehd; rk;ghjpj;jJ ahhplKk; Nfl;fj; Njitapy;iy vd;W epidf;f$lhJ> Vndd;why; cq;fSf;F nghUshjhuhPjpahfTk;> cly;hPjpahfTk; VNjDk; ,og;G Vw;gl;lhy; Kjypy; ghjpf;fhg;gLtJ  cq;fs; tho;f;if Jiz jhd;> mjdhy; mth;fsplk; Kjypy; fUj;Jf;fs; Nfl;fNtz;Lk;.

·       nghUshjuj;ij <l;LtJ fztdpd; flik> FLk;gj;ij guhkhpg;gJ kidtpapd; flik> ngz;fs; Ntiyf;F nry;yjPh;khdpg;gjw;f;F Kd;G FLk;g eyidAk; Foe;ijfspd; vjph;fhyj;ijAk; fUj;jpy; nfhs;sNtz;Lk;.

·       fztDk; kidtpAk; jq;fsplk; cs;sij itj;J nfhz;L tho fw;Wf;nfhs;sNtz;Lk;> gpwh; tho;tJ Nghy; ehKk; Mlk;gu tho;f;if tho Ntz;Lk; vd;W Nguhirgl;lhy;> mJ fld; Rikia mjpfg;gLj;Jk;.

·       fztNdh kidtpNah cq;fs; tho;f;if Jizaplk; ,Ue;J ePq;fs; vd;d vjph;ghh;fpwph;fNsh. mjid Kjypy; ePq;fs; cq;fs; tho;f;if Jizf;F nfhLq;fs;. mJ md;G, mutizg;G, ek;gpf;if, XOf;fk; Nghd;W vJthf ,Ue;jhYk; rhp, gpwF mJ jhdhf cq;fSf;F jpUg;gp fpilf;Fk;.

·       fztd; gpw ngz;fsplKk; kidtp gpw Mz;fsplKk; tuk;G kPwp NgrNth gofNth$lhJ> Vndd;why; mJ Njitapy;yhj re;Njfq;fis cz;lhf;Fk; ,jdhy; FLk;g tho;f;if ghjpf;Fk;.

·       fztDk; kidtpAk; gpwh; kdk; rQ;ryg;gLk;gb cilfs; mzpaf;$lhJ ,y;iynadpy;> cq;fis ghh;g;gth;fs; jtwhd fz;Nzhl;lj;jpy; ghh;g;ghh;fs;, mJ Njitapy;yhj gpur;ridfis cz;lhf;Fk;;.

·       Nghij gof;fk; clYf;Fk; FLk;gj;jpw;Fk; NfL tpistpf;Fk;> ngw;Nwhh;fspd; ,e;j gof;fj;jhy; Foe;ijfs; ,e;j r%fj;jpy; mtkhdgLtJld; kdjstpy; ghjpf;fg;gLfpd;wdh;> NkYk; mth;fSk; me;j gof;fj;ij fw;W nfhs;fpd;wdh;.

·       fztDk; kidtpAk; Foe;ijfSf;F Kd;G rz;ilapl;L nfhs;s$lhJ> Vndd;why; mJ Foe;ijfis kdjstpy; ghjpf;Fk;.

·       fztDk; kidtpAk; kw;wth;fs; Kd;Gk; Foe;ijfs; Kd;Gk; XUth; kw;nwhUtiu juf;Fiwthf NgrNth> fpz;ly; nra;aNth $lhJ> Vndd;why; mth;fSk; rpy rkak; mth;fSf;F khpahij nrYj;jkhl;lhh;fs;.

·       fztDk; kidtpAk; jd; ngw;Nwhh; FLk;gj;ij ghh;j;J nfhs;tJ Nghy;> jd; tho;f;if Jizapd; FLk;gj;ijAk; ghh;j;J nfhs;sNtz;Lk;.

·       ,y;yw ,d;gj;jpy; <LglNtz;Lk;.

·       jpUkzj;jpw;F gpwF fhjyh;fis Nghy tho Ntz;Lk;.
                                                                                                                 

Thursday, 11 October 2012

iPhone 5 - Official Trailer


ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!





நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.



சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

(இந்த தகவலை பகிர்ந்த அந்த நல்லுள்ளதிர்க்கு "தேடலின்" மனமார்ந்த நன்றிகள் ...!           

                                                                                                       நன்றி
                                                                               Nagoorkani Kader Mohideen Basha
                                                                                                       Facebook


Friday, 6 July 2012

புற்றுநோய்க்கு தடுப்பூசி




முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு என்று புற்றுநோய் தாக்குதலை அதிகம் பார்க்கிறோம். இரண்டு பேருக்கான உரையாடலில்,அந்த இருவரில் ஒருவருக்குத் தெரிந்த யாரோ ஒரு நபருக்குப் புற்றுநோய் தாக்கியிருப்பது பற்றிய பேச்சு தவிர்க்க முடியாததாகி வருகிறது. மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கர்ப்பவாய் புற்றுநோயின் தாக்குதலுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள், மற்ற புற்றுநோய்களைத் தவிர்க்க இன்றைய மருத்துவத்தில் வழி உண்டு என்கிற செய்தி, பெண்களின் வயிற்றில் பால் வார்க்கும்.

கர்ப்பவாய் புற்றுநோயை வர விடாமல் செய்கிற அந்த தடுப்பூசியைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ் 

‘‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமி, பெண்களோட கர்ப்பவாயைத் தாக்கறதோட விளைவு தான், கர்ப்பவாய் புற்றுநோய். இந்த வைரஸ் சத்தமில்லாம தன் வேலையைச் செய்யறதோட சரி... வேற எந்த அறிகுறிகளையும் காட்டாது. 10-15 வருஷங்கள் கழிச்சுதான், நோய் விஸ்வரூபம் எடுக்கும். வெள்ளைப்படுதல், துர்நாற்றத்தோட வெள்ளைப்போக்கு, ரத்தப்போக்கு, அந்தரங்க உறவின் போது வலி மற்றும் ரத்தப் போக்கு...
இதெல்லாம்தான் அறிகுறிகள்.

பொதுவா இந்த வகைப் புற்றுநோய், கல்யாணமாகி, உடலுறவு கொண்ட பெண்களைத்தான் அதிகம் தாக்கும். இன்றைய நவீன மருத்துவத்துல, கல்யாணமாகாத இளம்பெண்களுக்கு முன்கூட்டியே போடப்படற ஒரு தடுப்பூசியின் மூலமா, கல்யாணத்துக்குப் பிறகான புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க முடியும்.

கல்யாணமாகாத பெண்களுக்கு இந்தத் தடுப்பூசியின் மூலமா 100 சதவிகித நன்மை கிடைக்கும்னா, கல்யாணமான பெண்களுக்கு 50 சதவிகித நன்மை கிடைக்கும். கல்யாணமான பெண்களுக்கு முதல்ல பாப் ஸ்மியர் சோதனை செய்து பார்த்து, அதுல நெகட்டிவ்னு தெரிஞ்சாதான் இந்த ஊசியைப் போட முடியும். இந்த ஊசியை மூன்று கட்டமா போடணும்.

முதல் டோஸ் போட்டு 2 மாதங்கள் கழிச்சு, 2வது டோஸ். 6 மாதங்கள் கழிச்சு 3வது டோஸ். ஒருவேளை முதல் ரெண்டு டோஸ் போட்டு, மூணாவது டோஸ் போடறதுக்குள்ளயே, அந்தப் பெண்ணுக்குக் கல்யாணமாகி, கர்ப்பம் தரிச்சிட்டா, பிரசவமாகிற வரை போடக் கூடாது. பிரசவமான பிறகு, தாய்ப்பால் கொடுக்கிற போதுகூட போடலாம். 9 வயது முதல் 45 வயதுப் பெண்கள் வரை இதனால பலனடைய முடியும். சரியான விழிப்புணர்வு வந்தா, அடுத்த தலைமுறைப் பெண்களை, கர்ப்பவாய் புற்றுநோய்லேருந்து காப்பாத்தலாம்.’ 


                                                                                                                             நன்றி 
                                                                                                                         தினகரன்
                                                                                                                           17-6-2012 
Related Posts Plugin for WordPress, Blogger...