Search This Blog

Friday 8 July 2011

சொகுசு கார் வாங்குவதில் வளைகுடா மக்கள் சாதனை



துபாய்: உலகின் சொகுசு கார் விற்பனையில் வளைகுடா நாடுகள் முக்கிய சந்தையாக விளங்குகின்றன. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ரோல்ஸ் ராய்ஸ், பியட் நிறுவனத்தின் மசெராடி மற்றும் போர்ச்  எஸ்இ ஆகிய கார்கள் இந்த ஆண்டில் வளைகுடா நாடுகளை சேர்ந்த பணக்காரர்களால் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட சொகுசு கார் விற்பனை இப்போது 20 சதவீதம்  அதிகரித்துள்ளது. இதுபற்றி வாகன ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் பீர்லுகி பெல்லினி கூறுகையில், ‘‘சொகுசு கார் வாங்குவதை வளைகுடா நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் கவுரவமாக கருதுகின்றனர். அக்கம்  பக்கத்து வீட்டினர், உறவினர்கள், நண்பர்கள் விலையுயர்ந்த கார் வாங்கி விட்டால், அதைவிட விலை அதிகமான காரை வாங்குவதை போட்டியாக நினைக்கின்றனர்’’ என்றார். பியட் கார் டீலர் ஒருவர்  கூறுகையில், ‘‘ஏப்ரல், மே மாதங்களில் சொகுசு கார் விற்பனை அமோகம். அடுத்த சில மாதங்களுக்கு ஸ்டாக் இல்லை என்ற நிலை உள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...