Search This Blog

Friday 10 June 2011

உளவு பார்க்கும் ரோபோ கேமரா



டொரன்டோ : வானத்தில் பறந்தபடியே ஆயிரம் அடி தொலைவில் இருந்து தெள்ளத் தெளிவாக படம் எடுக்கக் கூடிய ரோபோ கேமராவை கனடாவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. கனடாவை சேர்ந்த நிறுவனம் ஏரியன் லேப்ஸ். உளவு நிறுவனங்களுக்கு தேவையான எலக்ட்ரானிக் கருவிகளை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் உருவாக்கியிருப்பது ‘ஏரியன் ஸ்கவுட்’ எனப்படும் ரோபோ கேமரா. இதில் உள்ள தொடுதிறன் மானிட்டரில் (டச் ஸ்கிரீன்) முதலில் கூகுள் நிறுவனத்தின் வேர்ல்டு மேப் சாப்ட்வேர் மூலமாக நமக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

உதாரணமாக, ‘நியூயார்க்’ என்று தேர்வு செய்தால், ஏரியன் ஸ்கவுட் உடனே புறப்பட்டு நியூயார்க் நோக்கி பறக்கத் தொடங்கும். அங்கு சென்றதும் 500 அடி உயரத்தில் பறந்தபடியே, கீழே நடப்பவற்றை தனது டிஜிட்டல் கேமராவில் போட்டோவாக அல்லது வீடியோ காட்சியாக தொடர்ச்சியாக பதிவு செய்யும். கீழே இருந்து பார்த்தால் ரோபோவை கண்டுபிடிக்க முடியாது. சுமார் ஆயிரம் அடி தொலைவில் இருந்துகூட தெள்ளத் தெளிவான படங்களை எடுக்கும்.

பதிவாகும் காட்சிகளை இமெயிலுக்கோ, ஐபோனுக்கோ அனுப்பிக்கொண்டே இருக்கும். இதன் விலை ரூ.22 லட்சம். காரில் மிக வேகமாக செல்பவரின் முகத்தைக்கூட இக்கேமரா தெளிவாக படம் பிடிக்கும். தப்பிச் செல்லும் கொள்ளையரை பிடிக்கவும், மறைந்திருக்கும் கிரிமினல்களை பிடிக்கவும் இது உதவிகரமாக இருக்கும் என்கிறது ஏரியன் லேப்ஸ் நிறுவனம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...